Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 1.19 கோடி உண்டியல் காணிக்கை!!

Advertisement

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

Advertisement

அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தன்னார்வலர்கள், பத்மா சேவா சங்கம், கோயில் பணியாளர்கள் எண்ணினர். அப்போது ரூ. 1 கோடியே 19 லட்சத்து 74 ஆயிரத்து 482 ரொக்கமும், 2 கிலோ 866 கிராம் தங்கமும்,5 கிலோ 222 கிராம் வெள்ளியும், 28 அயல்நாட்டுநோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்தார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *