Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முட்டை வியாபாரியிடம் 1.26 லட்சம் ரொக்கம் பறிமுதல்!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. 

Advertisement

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக முசிறியில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன‌. உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் நேற்று ஓயாமரி சாலையில் பறக்கும் படை தேர்தல் அதிகாரி சுமதி தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவில் முட்டை வியாபாரியான திருப்பூரைச் சேர்ந்த சசி குமார் என்பவரிடம் இருந்து 1.26 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *