Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 1000 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது

திருச்சியில் நாள்தோறும் குட்கா விற்பனை மற்றும் உணவு தர நிர்ணயம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மைசூரில் இருந்து திருச்சி காந்தி மார்க்கெட்க்கு முட்டைகோஸ் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் 10 மூட்டைகள் குட்காவை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட இருவரும் மைசூரை சேர்ந்த மனோஜ், சோமு என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 30 லட்சம் என கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *