Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விளைநிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி விளைநிலத்தில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு திங்கட்கிழமை பிடிபட்டது.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் இக்கரைக்கோசிக்குறிச்சியில் வசித்து வரும் விவசாயி சின்னச்சாமி என்பவரது கடலை தோட்டத்தில் திங்கட்கிழமை மலைப்பாம்பு ஒன்று நகராமல் படுத்திருந்துள்ளது.

அதைக்கண்ட அப்பகுதிவாசிகள் கூச்சலிட, பக்கத்திலிருந்த நியாயவிலை விற்பனையாளரும், முன்னாள் ராணுவ வீரருமான சகாய சின்னப்பன் கிராம இளைஞர்களுடன் சேர்ந்து தோட்டத்திலிருந்த 10 அடி நீள மலைப்பாம்பினை பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்பு அருகிலிருந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

          

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *