Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதில் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப கூடிய பயணிகளில் ஒரு சிலர் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இன்று துபாயிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்தவர்களை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி தன்னுடைய உடைமைகள் அடங்கிய பைக்குள் துணி வடிவில் தங்கத்தை ஒட்டி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 255 கிராம் எடையுள்ள 12 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் என்று மதிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *