Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி பெண்ணுக்கு 122 வயது – ஆதாரில் அதிசயம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த கவிதா மனு அளித்தார். அந்த மனுவில் தனது வாக்காளர் அடையாள அட்டையில் 03.05.1982 என எனது பிறந்த தேதி குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆதார் கார்டில் பிறந்த தேதியில் 1900 என வருடம் பதிவாகியுள்ளது.  

இதனால் தனது வயது நூரைத் தாண்டி காட்டுகிறது. ஆதார் அட்டையில் 1900 என்பதை 1982 என மாற்ற கோரி நான்கு ஆண்டுகள் அலைவதாகவும், இதனால் பல இன்னல்களை தொடர்ந்து நான் சந்தித்து வருவதாகவும் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருவதாகவும் தெரிவித்தார். 

ஏனென்றால் நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகள் படிப்பிற்காகவும் மற்ற தேவைக்காகவும் வங்கிகளில் லோன் எடுக்க வேண்டும் அல்லது மகளிர் சுய உதவிக் குழு லோன் எடுக்க வேண்டும் என்றாலும் யாரும் எங்களுக்கு தர மறுக்கிறார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த நான்கு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனவே இந்த மனுவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *