Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட12,400 சிகரெட்டுகள் பறிமுதல்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்றுமுன்தினம் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் உரிய அனுமதியின்றி தனது பெட்டியில் ஏராளமான சிகரெட் பாக்கெட்டுகளை வைத்திருந்தார். மொத்தம் 12,400 சிகரெட்டுகளை சுங்கத்துறையினர் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம்.

இதுகுறித்து பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *