Tuesday, September 23, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

14 நாட்கள் முடிவு – பயன்பாட்டிற்கு வரும் காந்தி மார்க்கெட் சாலைகள்!

திருச்சி காந்தி மார்க்கெட் ஒட்டிய பகுதிகள் இன்று மாலை முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட்டை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை முழுவதும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காந்தி மார்க்கெட் சாலை தடுப்புகள் அமைத்து முழுமையாக அடைக்கப்பட்டது.

Advertisement

அடைக்கப்பட்டு இன்றுடன் 14 நாள்களான நிலையில், நேற்று மார்க்கெட்டை ஆய்வு செய்த திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் “இப்பகுதியில் புதிதாக நோய் தொற்று பாதிப்பு உள்ளானவர்கள் கண்டறியபடவில்லை, எனவே மார்க்கெட் பகுதி சாலை மாலை முதல் செயல்படலாம்” எனத் தெரிவித்தார்.

Image
slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *