Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிரபல கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை

திருச்சி திருவெறும்பூர் அருகே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் தமிழக மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவ, மாணவிகள் தொழில்நுட்ப கல்வியை பயின்று வருகின்றனர். அப்படி பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும் வெளியில் வாடகைக்கு அறை மற்றும் வீடுகள் எடுத்தும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி என்ஐடி கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் பிரதான்யா தனது காதலனுடன் கல்லூரி விடுதியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியில் சென்று இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு கல்லூரி எதிரே இருந்த பேருந்து நிலையத்தில் அதிகாலை அமர்ந்து இருந்த பொழுது அங்கு வந்த வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (32) என்பவன் பிரதான்யா காதலனை விரட்டிவிட்டு பிரதான்யாவை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

உடனே காதலன் தனது காதலியை ஒருவர் இழுத்துச் சென்று விட்டதாக கூறி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததோடு உடனடியாக மணிகண்டனை கைது செய்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீ வர்ஷன், மணிகண்டனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *