Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சார்ஜா மற்றும் துபாய் நாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரு வேறு விமானங்களில் பயணித்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த பயணியின் உடையில் மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட 12.62 லட்சம் மதிப்புள்ள 245.500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் துபாயில் இருந்து வந்த பயணியை சோதனை செய்ததில் அந்த பயணி பயன்படுத்திய லேப்டாப்பில் சுமார் 28.11லட்சம் மதிப்பிலான 280 கிராம் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் மற்றொரு பயணி கொண்டுவந்த 9 தங்க வளையல்கள் விமான நிலைய ஆண்கள் கழிவறைக்குள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் 23.07 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 63.80 லட்சம் மதிப்புடைய 974.5கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை எடுத்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *