இதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரம்பூர் செல்லக்கூடிய அரசு பேருந்து படிக்கட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கியபடி பயணித்தனர். இந்த பேருந்து தெப்பக்குளம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மாணவர்களின் தலை மோதுவது போல் சென்றது இதையும் பொருட்படுத்தாத மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.
இந்த நிலையில் இது போன்ற சில மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்குவதை ஒரு பேஷனாக செய்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments