Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பெண்கள் பலி

திருச்சி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று இரவு சிறிது நேரம் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் திருச்சியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து ஊரில் விவசாய நிலத்தில் எட்டுமா திடலை சேர்ந்த ராதிகா, செல்வி இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வயலில் இருந்து 2 பெண்களும் நடந்து சென்றனர்.

அப்பொழுது வயலில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாத இரண்டு பெண்களும் மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக திருச்சி மாவட்ட காவல் துறையினர் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *