Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு செவிலியரை கொடூரமாக கொலை செய்த 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டை அரசு துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றிய கலாவதி (55). இவர் கடந்த 2017ம் ஆண்டு, பாத்ரூமில், வாயில் துணியை வைத்து, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரை கொடுக்காததால் அவரை கொலை செய்ததாக, வடுகர்பேட்டை அருகே உள்ள செம்மன்பாளையம் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் அகஸ்டின் லியோ (21), ராமன் (20) ஆகியோர் வாக்கு மூலம் கொடுத்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா, 8000 ரூபாய் அபராதமும் விதித்து, திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *