Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் 200 ஏக்கர் சம்பா நெற்பயிர் பாதிப்பு:

திருச்சி மாவட்டத்தில் 1.17 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. பயிர்களுக்கு இயற்கை அல்லது செயற்கை ரீதியான இடர்பாடுகள் ஏற்படவில்லை எனில் 2.50 லட்சம் டன் நெல் அறுவடையாகும் என்று இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல நூறு ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *