Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தேசிய கல்லூரி சார்பில் ரோட்ராபேஸ்ட் நிகழ்ச்சி

திருச்சி தேசிய கல்லுரியில் ரோட்டராக்ட் சங்கம் சார்பில் 9-க்கும் மேற்பட்ட -கல்லூரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் பங்கேற்ற ரோட்ராபேஸ்ட் நிகழ்வு நடந்தது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் கி.குமார், துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி கள் ஏ.பெரியசாமி, எஸ்.அறிவரன், எஸ்.அறிவான் கோட்டி. மணிகண்டன்,பி.கோபால சிருஷ்ணன் ஆகி யோர்கள் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு நடுவர்களால் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  

நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் சங்கத்தை சேர்ந்த எஸ்.எம். கவுசர் ரேஷ்மா வரவேற்றார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் எஸ்.சண்முகவேல். ஆர். ராஜ கோவிந்தசாமி, வி. அழுதவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டி முடிவில் ஒட்டு மொத்த வெற்றி கோப்பையை கே.ராம கிருஷ்ணன் பொறியியல் கல்லூரியும். 2ம் இடத்திற்கான -கோப்பையை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும் பெற்றார்கள். 

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெட் கேலக்ஸியின் நிறுவனர் நித்தியா மற்றும் டாக்டர் கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

ஏற்பாடுகளை நிகழ்ச்சி விழா ஒருங்கி ணைப்பாளர் த.சிவசுப்பி ரமணியராஜா செய்திருந்தார். 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *