Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

லாரி ஓட்டுனர் வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் 20 ஆயிரம் ரொக்கம் திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஹேமாவாணி என்ற மகளும், திலக் அமர்நாத் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சென்னையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு பாஸ்கரும், அவருடைய மனைவியும், பின்பக்க கதவை தாளிட்டு முன் பக்கத்தில் உள்ள வராண்டாவில் படுத்து உள்ளனர். பின்னர் அதிகாலை எழுந்த பாஸ்கர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுக்குறித்து உடனடியாக துறையூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பாஸ்கர் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை கொண்டு சோதனை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *