Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 2500 பேர் பங்கேற்பு

திருச்சியை போதையில்லா மாநகரமாக உருவாக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மாரத்தான் போட்டி முதலாவது பதிப்பு இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் துறையுடன், மொரைஸ் சிட்டி இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டியானது, சத்திரம் பேருந்து நிலையம், ஜோசப் கல்லூரியில் இருந்து தொடங்கியது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொராய்ஸ்சிட்டி உரிமையாளர்
லெரொன் மொராய்ஸ், ஜோசப் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் 2,500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜோசப் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை, மதுரை ரோடு, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது.
மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்  சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 15, 000 ரூபாய், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ்களை திருச்சி மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன் மற்றும்  மொராய்ஸ்சிட்டி உரிமையாளர்லெரொன் மொராய்ஸ் ஆகியோர் வழங்கினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *