Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் 28 நாட்கள் முதல் சுற்று புருஸ்ஸிலா தடுப்பூசிப் பணி – ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் (01.02.2023) முதல் (28.02.2023) முடிய 28 நாட்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய கால்நடைநோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் முதல் சுற்று புருஸ்ஸிலா தடுப்பூசிப் பணி (Brucella Vaccination under NADCP) மேற்கொள்ளப்படவுள்ளது. 

இத்தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. இத்தடுப்பூசிப் பணியின் போது 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகள் கண்டறியப்பட்டு, அவைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, காதுவில்லைகள் பொருத்தப்பட்டு, இத்தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படும். தடுப்பூசிப் போடப்படும் கிராமங்களில் அருகில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் முன்னறிவுப்பு செய்யப்பட்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.

கிடேறி கன்று வைத்துள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்களது கன்றுகளுக்கு புருஸ்ஸிலா தடுப்பூசிப் போட்டுக் கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகிடுமாறும், கன்றுகளுக்கு தடுப்பூசிப் போட்டுக் கொண்டு பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *