Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வாக்குவாதத்துடன் திருச்சியில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்!!

புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமென டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 20வது நாளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 

Advertisement

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தினை தொடங்கினர். இதனையடுத்து 2வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனால் போராட்டக்கார்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையெடுத்து விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.

Advertisement

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *