Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கஞ்சா மற்றும் பயங்கர ஆய்தங்களுடன் காரில் வந்த 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சள் திடல் பாலம் பிரியங்கா நகர் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிபடை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட பொழுது காரில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள்கள் இருந்துள்ளது.

அந்த காரில் இருந்த புதுக்கோட்டை அறந்தாங்கி கடையாதுப் பட்டியைச் சேர்ந்த சுரேஷ் குமார் (32), காட்டூர் மஞ்சள் திடல் பிரியங்கா நகரை சேர்ந்த அருண் ( 27 ), திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த டேனியல் சாம் ஜெபதுரை (28) ஆகிய மூன்று பேரையும் எஸ்பி தனி படை போலீசார் பிடித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதன் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அந்த மூன்று பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *