Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

30 மூட்டை ரேஷன் அரிசி, லோடு ஆட்டோ பறிமுதல் – கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள உன்னியூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தொட்டியம் தாசில்தார் கண்ணாமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் கண்ணாமணி தீவிர ரோந்து பணி ஈடுபட்டனர்.

அப்போது தொட்டியம் அருகே உள்ள உன்னியூர் கிராமத்தில் சென்ற லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரும், அதில் வந்த நபர்களும் இறங்கி தப்பி ஓடினர். சோதனையில் லோடு ஆட்டோவில் இருந்தது 30 மூட்டை ரேஷன் அரிசி என்பதும், ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து தாசில்தார் கண்ணாமணி 30 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவை காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து திருச்சி உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *