Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி முக்கொம்பிலிருந்து 36 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீரானது மாயனூர் கதவணை கடந்து திருச்சி முக்கொம்பிற்க்கு வரும் நிலையில் காவிரி ,கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது .இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி முக்கொம்பு மேலணையில் 10 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் பழைய கதவணையில் திறந்து விடப்பட்டது. 

கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் ஆற்றில் உள்ளே உள்ள சலவைத் தொழிலாளிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்திருந்தார். கொள்ளிடம் கதவணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பொழுது 9 மதகுகள் உடைந்தது.

 இதனை அடுத்து புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிக்க இருபத்தி நான்கு மாத காலம் .புதிய கதவணை தற்பொழுது 92% மட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. காரணம் இரண்டு முறை கோவிட் தொற்று காலம் பொது முடக்கம் பணியாட்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டனர்.

தற்போது மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் காவிரியில் ஏற்கனவே 12ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு கொள்ளிடம் பழைய கதவணை இருந்து 32 மதகுகள் மூலம் தற்போது வரும் 36 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது .  

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரக்கூடிய 36 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதற்க்கு காரணம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெள்ளம் மேலும் சிறு வாய்க்கால்கள் காட்டாறுகளில் ஓடிவரும் மழை நீர் காவிரியில் வந்து கலக்கிறது.

இதனால் முக்கொம்பு மேலணை காவிரியாற்றில் நீர் திறக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *