Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், காந்திமார்க்கெட் 
காவல்நிலைய எல்லைக்குட்பட்ட W.B ரோடு, மரக்கடை சந்திப்பில் உள்ள பொது 
கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21-ந்தேதி ரிஷாந்த் என்பவரை மர்ம நபர்கள் 
முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டதாக அவரது தாய் கொடுத்த 
புகாரின் பேரில் காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 1.சூர்யா (21), 2.ஹமீது (எ) கருப்பு (24), 3. ஸ்டீபன் (எ) மொட்ட ஸ்டீபன் (27) 4.வேலு (எ) மாஞ்சா வேலு (எ) ராஜதுரை (23), 5. குருமூர்த்தி (20), 6.வெங்கடேசன் (29) 7. சுரேந்தர் (33), 8. மணிகண்டன் (எ) டிராகன் மணி 9. அரவிந்த் (27), ஆகியோர்களை கடந்த 14.09.21-ந்தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேற்கண்ட எதிரிகள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததால், 9வது எதிரி அரவிந்த் (27), என்பவரை கடந்த 02.11.21ந்தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கின் முதல் எதிரியான சூர்யா (21) என்பவரை கடந்த 11.11.21ந் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் வழக்கின் 3வது எதிரியான ஸ்டீபன் (எ) மொட்ட ஸ்டீபன் (27) என்பவரை கடந்த 13.11.21ந்தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளான 1.வேலு (எ) ராஜாதுரை என்பவர் மீது 10 வழக்குகளும், 2.கருப்பு (எ) ஹமீது  என்பவர் மீது 11 வழக்குகளும், 3.சுரேந்தர் (எ) சுரேந்திரகுமார் என்பவர் மீது 13 வழக்குகளும், 4)வெங்கடேஷ் (எ) வெட்டு 
வெங்கடேசன் என்பவர் மீது 32 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரிகள் 1.வேலு (எ) ராஜாதுரை, 2.கருப்பு (எ) ஹமீது, 3.சுரேந்தர் (எ) சுரேந்திரகுமார், 
4.வெங்கடேஷ் (எ) வெட்டு வெங்கடேசன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையிளை பரிசீலனை

செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி 
ஆணை 19.11.21ந்தேதி சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *