Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி கோட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் திருவிழா எதிர்வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் (12.03.2023), (19.03.2023), (26.03.2023), (02.04.2023) மற்றும் (09.04.2023) நடைபெற உள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் மறுநாள் காலை 9.00 மணி வரை திருச்சிராப்பள்ளிக்கு வந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதைகளில் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் கீழ்காணும் வகையில் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

➢ மதுரை – சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்கள் விராலிமலையிருந்து மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

➢ திண்டுக்கல் – சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்கள் மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பிலிருந்து தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். 

 ➢ துறையூர் – திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் முசிறி ரவுண்டானா, முசிறி பெரியார் பாலம், குளித்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். 

➢ சேலம் – முசிறி – திருச்சிமார்க்கம் செல்லும் வாகனங்கள் முசிறி பெரியார் பாலத்திலிருநது, குளித்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

 ➢ சென்னை – திருச்சிமார்க்கம் செல்லும் வாகனங்கள் சிறுகனூர், தச்சங்குறிச்சி, பூவாளுர் வழியாக சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (NH-38) சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்தடைந்து திருச்சி செல்ல வேண்டும். 

➢ சிதம்பரம், அரியலூர் மார்க்கத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள் பெருவளநல்லூரிலிருந்து குமுளூர் தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் சென்று சிறுகனூர், தச்சங்குறிச்சி, பூவாளுர் வழியாக சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (NH -38) சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்தடைந்து திருச்சி செல்ல வேண்டும். 

எனவே, பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி போக்குவரத்து மாற்றத்தினை கவனத்திற்கொண்டு செயல்படுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தவைலர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *