Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகரில் 50 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி கே.கே.நகர் பகுதி தென்றல் நகரில் வசித்து வரும் கார்த்திக் த/பெ.விஸ்வநாதன் என்ற நபரின் திருப்பதி டீ கடையில் ஆய்வு செய்தபோது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டை ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் சுமார் 50 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிற கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது.  மேற்படி நபர் மீது வழக்கு போடுவதற்காக 6 சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் கே.கே. நகர் காவல் துறையிடம் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், பொதுமக்களும் தாங்கள் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக சந்தேகித்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

புகார் எண் : 99 44 95 95 95

மாநிலபுகார் எண் : 9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *