Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இட்லி வாங்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 52 வயது நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 14.02.2022-ந்தேதி பசுமடம் காஜாப்பேட்டையில் உள்ள எதிரியின் வீட்டில் இட்லி வாங்க சென்ற சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜோசப் (வயது 52) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 25.02.22-ந்தேதி அம்பிகாபுரம் அருகில் சிற்றுண்டி கடை நடத்தி வரும் பெண்ஒருவரிடம் கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக கொடுத்த புகாரின் பேரில் ரவுடிசாகுல்மீரான் வயது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் மேற்படி வழக்கின் ரவுடி சாகுல்மீரான் மீது பல்வேறுகாவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது. எனவே, மேற்படி ஜோசப் மற்றும் சாகுல்மீரான் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், இவர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *