Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆணையூரில் வசித்து வருபவர் ஆண்டியப்பன் மகன் ராஜகோபால்((26). கட்டடத் தொழிலாளியான இவரது வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கும், அருகில் கால்நடை மேய்ச்சலுக்கும் சென்றிருந்த நிலையில் சுமார் 100 மீட்டர் அருகிலிருக்கும் மற்றோரு வீட்டில் ராஜகோபால் குளிக்க சென்று விட்டு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவிலிருந்த 7 சவரன் நகை, 3 வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவை காணமல் போனது தெரியவந்தது. புகாரின்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள்,

வீடு புகுந்து அங்கு வழக்கமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து திருச்சியிலிருந்து மோப்ப நாய் லீலி, கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் செ.தங்கசாமி தலைமையிலான போலீஸார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *