Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தடுப்பூசி போட்ட எட்டு பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் மீட்கப்பட்டு அரசு நிதியுடன் திருவானைக்காவல் மாம்பழச் சாலையில் அருகே உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த காப்பகத்தில் உள்ள மூன்று முதல் ஒன்பது மாத குழந்தைகள் என 20 குழந்தைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் எட்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதைக் கண்ட அங்கிருந்து ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அந்த குழந்தைகளுக்கு 24 மணி நேரம் பலத்த கண்காணிப்புடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு ஆண் குழந்தைகள், ஆறு பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்ததாகவும், இதன் காரணமாக தடுப்பூசி போடப்பட்ட பின் அந்த குழந்தைகளுக்கு மூச்சுத் தன்னால் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *