Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது!!

திருச்சி மாவட்டம், லால்குடியில் 9 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement

லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (58). இவரது வீட்டின் கீழ் பகுதியில் அப்பாஸ் மகன் நத்தர்ஷா (32) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது வீட்டின் உரிமையாளரின் 9 வயது மகளும், நத்தர்ஷாவின் மகளும் அதே பகுதியில் உள்ள நெஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இருவரும் கல்வி பயில்கின்றனர். வியாழக்கிழமை நத்தர்ஷா வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் நத்தர்ஷா. இதனால் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது.

Advertisement

இச்சம்பவம் குறித்து சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை நத்தர்ஷாவிடம் கேட்ட போது, தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இது குறித்த சிறுமியின் தந்தை லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை செய்து, நத்தர்ஷாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *