Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகரில் நாளை(23.10.2021) நடமாடும் மருத்துவக் குழு மூலம் கோவிட் தடுப்பூசி பிரத்யேக ஏற்பாடு

திருச்சி மாவட்டத்தில் நாளை(23.10.2021) 6ம் கட்டமாக மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 600 இடங்களில் மாவட்டத்தில் நாளை ஒரு லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்த இலக்கை அடைய மாவட்ட நிர்வாகம் துரித கதியில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளது.

இந்நிலையில் மாநகர் பகுதிகளில் நாற்பது இடங்களில் நடமாடும் கோவிட் தடுப்பூசி மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த  திட்டமிடப்பட்டுள்ளது. பண்டிகை காலம்  என்பதால் பொதுமக்கள்  செல்லும் இடங்களில் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றால் நடமாடும் மருத்துவ குழுக்களை அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *