Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு துணை கண்காணிப்பாளர் தலைமையில் வளைக்காப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் திவ்யா. இவருக்கும் மட்டப்பாறைப்பட்டியை சேர்ந்த விவசாயியான கோபி என்பருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவிற்கு காவல்துறையினர் வளைக்காப்பு வைபவம் செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி காவல் துணை கண்காணிப்பாளர் த.ஜனனிபிரியா, ஆய்வாளர் சு.கருணாகரன் ஆகியோர் தலைமையில் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்நிலையத்திற்கு தம்பதிகள் மற்றும் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, மாலைகள் அணிவித்து, நலுங்கு வைக்கப்பட்டது. உறவினர்கள் முதலில் வலையல் காப்புகளை அணிவித்ததையடுத்து,

காவல் துணைக்கண்காணிப்பாளர் த.ஜனனிபிரியா மற்றும் பெண் காவலர்கள் திவ்யாவிற்கு நலுங்கு வைத்து வலையல் அணிவித்தனர். நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் த.சேக்கிழார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் எம்.சுப்பையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். விழாவில் 7 வகையான சாதத்துடன் விருந்து அளிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *