Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மழைநீர் சூழ்ந்துள்ள 6 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள 6 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 

தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை. 

வயலூர் பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள 6 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 

மேலும் மாவட்டம் முழுவதும், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் வடிந்து வருகிறது எனவும் மணப்பாறையில் இருந்து அரியாற்றில் வரும் தண்ணீரின் வரத்து குறைந்துள்ளது எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, புங்கனூர் பகுதியில் அரியாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரி செய்யப்படும் என்றும் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவழி போக்குவரத்து, இன்றுக்குள் இருவழி போக்குவரத்தாக மாற்றப்படும் என்றும் ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *