Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி தேதி அறிவிப்பு

திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி வரும் 04.12.2021 மற்றும் 05.12.2021 ஆகிய தேதிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் அணியினர் 04.12.2021 அன்று காலை 7.00 மணிக்கும், பெண்கள் அணியினர் 05.12.2021 அன்று காலை 7.00 மணிக்கு வர வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப் போட்டி 05.12.2021 அன்று மாலை 6.00 மணி அளவில் மின்னொளியில் நடைபெறும்.

வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத் தலைமை புரவலர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். மேலும் விபரங்களுக்கு கோவிந்தராஜன், செயலாளர், திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகம் 9843714848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *