Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வசிய மருந்து தடவி வயதான பெண்ணிடம் 10 பவுன் நகை நூதன வழிப்பறி 

திருச்சி பாலக்கரை பருப்பு காரதெருவை சேர்ந்த காளிமுத்து (வயது 65). இன்று காலை பாலக்கரை எஸ்பிஐ ஏடிஎம் பகுதிக்கு வந்து வந்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு வாலிபர்கள் அவரிடம் பேசியுள்ளனர். அவர் மீது ஏதோ ஒரு மருந்தை தடவி உள்ளனர்.

பின்னர் தாங்கள் போலீஸ் எனவும், முககவசம் ஏன் அணியவில்லை என கூறி முகக்கவசம் அணிய விட்டு காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை கழட்டி வாங்கிக் கொண்டு சென்று விட்டனர். தற்போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் முத்தரசு மற்றும் உதவி ஆணையர்கள் இந்த நூதன வழிப்பறிக் கொள்ளையர்களைப் கண்காணிப்பு கேமராவில் செய்யும் காட்சிகள் பதிவாகி இருக்கிறதா என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகலில் வயதான பெண்ணிடம் வசிய மருந்து தடவி 10 பவுன் தங்க நகைளை வாலிபர்கள் பறித்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *