Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டெல்டா மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் வகையில் ஆக்ஸிஜன் வசதி தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ளது – மாவட்ட ஆட்சியர் பேட்டி

60 வயதை கடந்தவர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்று முதல் கொரோனா பூஸ்டர் டோஸ் முதல் தடுப்பூசி செலுத்தி துவக்கினார். திருச்சி மாவட்டத்தில் தொடக்கப்பட்டது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு… திருச்சி மாவட்டத்தில் 36,760 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியான நபர்களாக இருக்கின்றனர்.

திருச்சியில் 7 சிறப்பு கொரொனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 2185 படுக்கை வசதிகள் உள்ளன. இது தவிர அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 6397 படுக்கை வசதிகள் இருக்கிறது. மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியாக 88 சதவீதமும் இரண்டாம் தவணை தடுப்பூசி 58 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதே போல 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் 1,26,400 இதில் முதல் தவணையாக 1,01,980 பேர் என 80.7 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் வசதி போதுமான அளவு இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விநியோகிக்கும் வகையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. தினமும் 6000 கொரொனா மாதிரிகள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நேற்று 3000 க்கும் அதிகமான மாதிரிகளை எடுத்துள்ளோம்.

ஒமிக்ரான் மட்டுமல்ல டெல்டா வகையும் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் இந்த அலையில் 3000 முதல் 4000 வரை பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மக்கள் முக கவசம் அணிவதையும், தனி மனித இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசியையும் செலுத்தி கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது கொரொனா பாதிப்புகள் அதிகமாவதை தடுக்கலாம்.

கடந்த இரண்டு அலைகளில் திருச்சி மாவட்டத்தில் கொரொனா பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம். இந்த முறையும் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் (Random Test )எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு என்ன வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்குகிறார்களோ அதை திருச்சி மாவட்டத்தில் பின்பற்றுவோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *