Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலையத்தில் 3 பேரிடமிருந்து 52 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் 8 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியை சோதனை செய்தபோது பசை வடிவில் மூன்று கட்டிகளை மலக்குடலில் மறைத்து வைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 745 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் 36.54லட்சம் ரூபாய் மதிப்பு என கணக்கிடபட்டுள்ளது.

அதேபோல் துபாயிலிருந்து திருச்சி வந்த மற்றொரு விமானத்தில் வந்து பயணிகளை சோதனை செய்தது ஒரு பயணி சிலிண்டர் வடிவிலான உருளை வடிவில் 15 தங்க கட்டிகளும், E வடிவிலான 26 எண்ணிக்கையில் தங்க துண்டுகளும், I வடிவிலான 25 தங்க துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 15.33லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்ததில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 7 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *