Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாலையோரத்தில் கிடந்த 2மாத ஆண் குழந்தை

திருச்சி பெருகமணி அருகே உள்ள இராமகிருஷ்ண குடில் சாலையோரத்தில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை இருந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் அந்த குழந்தையை மீட்டு சைல்டு லைன் அமைப்பு மூலம் 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் குழந்தையை வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் இருக்கிறதா என்று என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *