Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் 24 மனுக்கள் தள்ளுபடி 2260 மனுக்கள் ஏற்பு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சி மொத்தம் 401 வார்டுகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றோடு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற வேட்பு மனு மீதான பரிசீலனையில்

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் போட்டியிட 718 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 711 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதையே போல் 5 நகராட்சிகளில் போட்டியிட 676  வேட்பு மனு செய்து இருந்த நிலையில் 12 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 664 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் 14 பேரூராட்சிகளில் உள்ள 216 வார்டுகளுக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 885 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2284 பேர் வேட்பு மனு செய்திருந்த  நிலையில் 2260 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *