Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் மற்றொரு வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்

No image available

திருச்சி துறையூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 112 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் 10 வது வார்டில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் அதிமுக வேட்பாளர் எஸ்.கந்தசாமி உட்பட 4 பேரின் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. அந்த வார்டில் நகரமன்ற முன்னாள் தலைவரும், துறையூர் நகர திமுக செயலாளருமான முரளியின் வேட்புமனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதானல் அந்த வார்டில் முரளி போட்டியின்றி வெற்றி பெற்றுவது உறுதியானது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *