Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஜிம் பயிற்சியாளரை கொலை செய்ய முயன்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த 23.12.21-ந்தேதி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 5வது 
கிராஸ் நியாயவிலைகடை சூப்பர் மார்க்கெட் அருகில், ஜிம் பயிற்சியாளாரான அருண்பாபு (36) என்பவர் முன்விரோதம் காரணமாக தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கொடுத்த புகாரின்பேரில் தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இதில் எதிரிகள் 1) பாலன் (எ) செவன் ஹில்ஸ் பாலன், 2) பார்த்திபன், 3) முகமதுசயிப், 4) அரவிந்த்ராஜ் (எ) அரவிந்தன், 5) சத்தியநாராயணன் (எ) Speed சத்யா ஆகியோர்கள் மீது தில்லைநகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேற்படி வழக்கின் குற்றவாளிகளான எதிரிகள் 1) பார்த்திபன் 2) முகமதுசியிப், 3) அரவிந்த்ராஜ் (எ) அரவிந்தன் ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையின் பேரில் எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஏற்கனவே
சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சத்தியநாராயணன் (எ) Speed சத்யா என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவருகிறது. எனவே எதிரி தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி 
மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி சத்தியநாராயணன் (எ) Speed சத்யா என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *