Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறுமதிருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னார் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. என். நேரு தமிழக முதல்வர் அறிவித்தது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.

குறை கூறினால் தான் அவர் முன்னாள் முதல்வர். ஆளுங்கட்சியாக நாங்கள் தற்போது இருக்கும் பொழுது மக்களிடம் அதிகமாக வாக்குகளை சேகரிக்க முற்படுவோம் .இதே பழனிச்சாமி முதல்வராக இருக்கும் பொழுது தளபதி இடம் சென்று மனு கொடுத்தாலும் என்னிடம் தான் அந்த மனுக்கள் வரவேண்டுமென குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கோவையில் அனைத்து இடங்களை கைப்பற்றியது. இந்த முறை திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும். சேலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருச்சி மாநகராட்சியில் 1300 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என வாக்குறுதி களை அளித்துள்ளோம் அதன் அடிப்படையில் பொதுமக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.
 எதிர்க்கட்சியாக இருக்கும்போது எங்களை சிறையில் வைத்து விட்ட பொழுது நாங்கள் 16 இடங்களை திருச்சி மாநகராட்சியில் கைப்பற்றினோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியிலும் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சேலத்திலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *