Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகை 12 லட்சம் ரொக்கம் 15 கிலோ வெள்ளி கொள்ளை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சாலங்குடி கிராமத்தில் பகுதியை சேர்ந்த மறைந்த ஏகாம்பரம்பிள்ளை பண்ணையாரின் மனைவி கமலா வீட்டை பூட்டி விட்டு திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனது மகள் விசாலி் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் 100 சவரன் தங்க நகைகள், 12 லட்சம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

உடனே இது குறித்து லால்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் கொள்ளையர்கள் யார் என்பது குறித்து லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் அடையாளம் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *