Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் 29-வது வார்டு கவுன்சிலர் – பொதுமக்கள் பாராட்டு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டு ஆழ்வார்தோப்பு, மீனாட்சிபுரம் ஆண்ட கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக சாக்கடை தூர்வாரப்படாமல் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலையும், மின் விளக்குகள் பராமரிப்பின்றி இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 29வது வார்டில் போட்டியிட்ட கமல் முஸ்தபா இப்பகுதியிலுள்ள மக்களின் கோரிக்கைகளும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலராக பொறுப்பேற்றிருக்கும் கமால் முஸ்தபா அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வருகிறார்.

குறிப்பாக நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த சாக்கடையை மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் சாலையில் செல்லாதவாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேபோன்று அண்ட கொண்டான், மீனாட்சி தோப்பு ஆகிய பகுதிகளில் மின் விளக்கு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிதாக மின் விளக்கை அமைத்து கொடுத்துள்ளார் இதனால் அப்பகுதி மக்கள் 29வது வார்டு கவுன்சிலருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *