Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (10.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம் மகாலட்சுமி நகர் பிரிவுக்குட்பட்ட விசுவாசம் நகர் தெற்கு பகுதி, சண்முகா நகர் மற்றும் லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் பழைய மின் கம்பிகளை அகற்றி விட்டு அதிக திறனுடைய புதிய மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்

நாளை(10.03.2022) காலை 09.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (10.03.2022) காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் கல்லக்குடி, பழங்காநத்தம், முதுவத்தூர், வடுகர்பேட்டை, மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, ஆலங்குடிமகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம், அரியூர், திருமாங்குடி, கல்விகுடி, ஆ.மேட்டூர், விரகாலூர், குலமாணிக்கம், விளாகம்,

வி.சி.புரம், சங்கேந்தி, கோவண்டாகுறிச்சி, புதூர்பாளையம், குமுளூர், தச்சங்குறிச்சி, அழுந்தலைப்பூர், சிறுவயலூர், காணிக்களிநல்லூர், கீழ்ரசூர், கல்லகம் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *