Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தியதாக நடிகர் சூர்யா மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திட்டமிட்டபடி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகுமா? என ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் பா.ம.க தரப்பில் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் 6 திரையரங்கில் மட்டும் இன்று காலை ரசிகர்களுக்காக சிறப்பு காட்சியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் பலத்த சோதனைக்கு பிறகே படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து திரையரங்கிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *