Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் நடைபெற்ற இளம் பெண்களுக்கான புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு பயிற்சி

திருச்சியில் உள்ள புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் முதுகலை மற்றும் புனர்வாழ்வியல் ஆராய்ச்சி துறை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கழகத்தின் நிதி உதவியுடன், “இளம் பெண்களின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பயிற்சி என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சியை 16 மார்ச் 2022 முதல் 18 மார்ச் 2022 வரை நடத்தியது.

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உள்ள இளம் பெண்களை புதுமையாளர்களாகவும் தொழில்முனைவோராகவும் உருவாக்குவதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை கல்லூரியின் முதல்வர் முனைவர். அருட். சகோதரி, கிறிஸ்டினா பிரிட்ஜெட் ஊக்குவித்து வழிநடத்தினார். இது அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறவும். வேலை வாய்ப்பு அளிப்பவர்களாகவும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்.

இந்த நிகழ்வு 16 மார்ச் 2022 அன்று காலை 9:00 மணிக்கு தொடங்கப்பட்டது. முதுகலை மற்றும் புனர்வாழ்வியல் ஆராய்ச்சித் துறையின் தலைவர் முனைவர் டுயுரின் மார்டினா வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பயிற்சித் திட்டத்தின் முக்கியத்துவத்தை ஏஞ்சல் செல்வராஜ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் & உதவிப் பேராசிரியர் முதுகலை மற்றும் புனர்வாழ்வியல் ஆராய்ச்சி துறை விளக்கினார்.

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியரும், தொழில்முனைவோர் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் மையத்தின் இயக்குநருமான முனைவர். என். பிரசன்னா கலந்து கொண்டார். பெண்கள் புதுமையாளர்களாக – தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் மாற்றத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் அவர் பார்வையாளர்களிடம் உரையாற்றினார். எதிர்காலத்தில் சிறந்த தொழில் முனைவோர் ஆவதற்கு வழிவகுக்கும் சிறிய கண்டுபிடிப்புகளை கண்டறிய மாணவர்களை ஊக்குவித்தார். வளரும் தொழில்முனைவோருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் இணைப் பேராசிரியர் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அருட் சகோதரி, இசபெல்லா ராஜகுமாரி மற்றும் புனர்வாழ்வு அறிவியல் முனைவர். அருட் சகோதரி லூர்து மேரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் சம்பந்தப்பட்ட யோசனைகள், சிறந்த நடைமுறைகள், சவால்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து வெளிச்சம் தரும் விரிவுரைகள் மற்றும் குழு விவாதங்கள் இடம் பெற்றது. பல்வேறு கல்லூரிகள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மாணவர்களிடம் புதுமை, யோசனை உருவாக்கம் மற்றும் தொழில்முனைவு குறித்து உரையாற்றினர்.

ரோபாட்டிக்ஸ் இன்ஜினியர் & புதுமைப்பித்தன் முகமது ஆஷிக் ரஹ்மான் அவர்களின் விரிவுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 40க்கும் மேற்பட்ட உயர்கல்வி கற்கும் இளம் பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர். கிறிஸ்சந்தா ஷகிலா மோத்தா நன்றியுரை கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *