Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அரிவாளைக்காட்டி இருசக்கர வாகனம் மற்றும் பணம் பறித்த எதிரி மற்றும் உணவு விடுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கடந்த 02.02.222-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞர் அறிவாலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் அரிவாளை காட்டி பணம் ரூ.2000/- மற்றும் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதாக கோட்டை குகுறப்பிரிவு காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து. வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி தினேஷ்குமார் வயது 29,  என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான எதிரி தினேஷ்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

கடந்த 10.03.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பைபாஸ் கொண்டயம்பேட்டை சேவை சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் எதிரி அய்யப்பன் (எ) அரவிந்தன் வயது 31, த.பெமோகன் என்பவர் ஊழியர்களை தாக்கியும், சுத்தியை காட்டி மிரட்டிதாக ரீரங்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி அய்யப்பன் (எ) அரவிந்தன் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான எதிரி அய்யப்பன் (எ) அரவிந்தன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே, மேற்படி எதிரிகள் தினேஷ்குமார் மற்றும் அய்யப்பன் (எ) அரவிந்தன்
ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு மற்றும் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், 
மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டர்.

 அதனை தொடந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *