திருச்சிராப்பள்ளி, துறையூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள அட்சயா புக் ஸ்டால், KR பீடா ஸ்டால் மற்றும் No.1 டோல்கேட் லால்குடி மெயின்ரோட்டில் உள்ள மதுரா டீ ஸ்டால் என்ற மூன்று கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் P.செந்தில்குமார் அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் மூன்று கடைகளும் சீல் செய்யப்பட்டது.
திருச்சி துறையூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள அட்சயா புக் ஸ்டால், KR பீடா ஸ்டால் மற்றும் ” No.1 டோல்கேட் லால்குடி மெயின்ரோட்டில் உள்ள மதுரா டீ ஸ்டால் கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
துறையூர் கடைகளில் 09.03.2021 அன்றும் லால்குடியில் உள்ள கடையில் 20.12.2021 அன்றும் முதல் ஆய்வில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் துறையூர்கடையில் 26.02.2022 அன்றும், லால்குடி கடையில் 24.02.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000அபராதம்விதிக்கப்பட்டது.
மேலும், அன்றைய தினமான 28.02.2022 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் P.செந்தில்குமார் IAS இன்று 23.03.2022-ல் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக கடை 28.03.2022 கடை சீல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், ரெங்கநாதன், இப்ராஹிம், அன்புச்செல்வன் வடிவேலு, சண்முகசுந்தரம் மற்றும் பாண்டி ஆகியோர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
Comments