Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கத்தியைக் காட்டி பணம் கொள்ளையடித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 24.03.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மா மண்டபம் சாலையில் உள்ள இரும்பு கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் ரூ.2000 பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரிகள் சக்தி (எ) சக்திவேல், காளிதாஸ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் விசாரணையில் மேற்படி எதிரிகள் மீது கடந்த 23.03.22ந்தேதி மூலத்தோப்பு. திருவள்ளுவர் தெருவில் உள்ள பொக்கிஷம் எண்ணெய் கடையில் ரூ.5000 பணத்தை பட்டாகத்தியை காட்டி கொள்ளையடித்த வழக்கிலும், மற்றும் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையம் காட்டூரில் உள்ள எண்ணெய் கடையில் பட்டாகத்தியை காட்டி செல்போன் மற்றும் சில பொருள்களை கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்புடையர்வகள் என தெரியவந்துள்ளது. 

மேலும் வழக்கின் எதிரிகளான சக்திவேல் மீது 5 வழக்குகளும், எதிரி காளிதாஸ் மீது சில வழக்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே, மேற்படி எதிரிகள் சக்திவேல் மற்றும் காளிதாஸ் ஆகியோர்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, 

திருச்சி மாநகர குற்ற காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். 

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *