Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 13.04.2022 அன்று முதலமைச்சர், நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத்தந்த பாரத ரத்னா டாக்டர். அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 – ஆம் நாளை ‘ சமத்துவ நாளாக’ கொண்டாடுவது என்று தமிழ்நாடு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண்.110 – ன் கீழ் அறிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல்  14 – ஆம் நாள் இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், தலைமையில், மாநகராட்சி ஆணையர் ப. மு.நெ.முஜிபுர் ரகுமான், முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை மேயர் வாசிக்க மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்களும் உடன் வாசித்து உறுதி மொழியினை எடுத்துக்கொண்டார்கள் .

முன்னதாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய  திருவுருவப்படதிற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் பி.சிவபாதம், ஜி,குமரேசன், மண்டலக்குழு தலைவர்கள் திருமதி.பு.ஜெயநிர்மலா, ஆண்டாள்ராம்குமார், உதவிஆணையர்கள் ச.நா.சண்முகம், செ.பிரபாகரன், எஸ்.திருஞானம், எஸ்.செல்வபாலாஜி மற்றும் மாமன்றஉறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *